மகாராஷ்டிராவில் நடந்த சாலை விபத்தில் டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி உயிரிழந்தார். மும்பை அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. விபத்தின் போது மிஸ்திரி அகமதாபாத்தில் இருந்து மும்பைக்கு மெர்சிடிஸ் காரில் சென்று கொண்டிருந்தார்.
குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து திரும்பியபோது விபத்து ஏற்பட்டு தொழிலதிபர் சைரஸ் மிஸ்திரி இறந்ததை பால்கர் எஸ்பி பாலாசாகேப் பாட்டீல் உறுதிப்படுத்தினார். குஜராத் - மகாராஷ்டிரா எல்லையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்தில் உயிரிழந்த இரண்டாவது நபர் பண்டோல் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மற்ற 2 பயணிகள் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், பாலத்தில் உள்ள சரோட்டி அருகே டிவைடரில் மோதி விபத்து நடந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். சொகுசு காரில் 4 பேர் இருந்த நிலையில், இருவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…