நேற்றைய தினத்தில் தங்கத்தின் விலை அதிகரித்து காணப்பட்ட நிலையில், இன்று சவரனுக்கு 480 ரூபாய் குறைந்துள்ளதால், மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கும் போது, அது பல மடங்கு பெருகும் என்பது யாவரும் அறிந்த ஒன்றே. அதன் படி, இந்த 2023 ஆம் ஆண்டில் அட்சய திருதியை ஆனது, இன்றும், நாளையும் அனுசரிக்கப்படுகிறது. ஆனால், நேற்றைய தினம் தங்கத்தின் விலை அதிகரித்ததால் மக்கள் மிகுந்த குழப்பத்தில் இருந்தனர். இன்று தங்கத்தின் விலை குறைந்தது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாள்களாகவே, தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்திலேயே இருந்து வருகிறது.
அதன் படி, 22 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு 60 ரூபாய் குறைந்து 5,605 ரூபாயாக உள்ளது. தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 அதிகரித்து ரூ.44,840 ரூபாயாக உள்ளது.
24 காரட் தங்கத்தின் விலை ரூ.60 குறைந்து ரூ.6,059 ஆகவும், 8 கிராம் தங்கத்தின் விலை ரூ.48,472 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை குறைந்து நிலையில், வெள்ளி விலையும் சரிந்துள்ளது. அதன் படி, வெள்ளியின் விலை கிராம் ஒன்றிற்கு 30 காசுகள் உயர்ந்து ரூ.80.40 ஆக உள்ளது. மேலும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.900 குறைந்து ரூ.80,400 ஆக உள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…