ஏற்ற இறக்கத்துடன் கூடிய தங்கத்தின் விலை, இந்த வாரத்தில் ஏறுவதும், இறங்குவதுமாகவே இருந்தது. அதன் படி, கடந்த இரண்டு நாள்களாக குறைந்த தங்கத்தின் விலை இன்று அதிகமானதால் இல்லத்தரசிகள் கவலையில் உள்ளனர்.
தீபாவளியை ஒட்டி, தங்கத்தின் விலை தொடர்ந்து குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று தங்கத்தின் விலை குறைந்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்தது.
ஆனால், இன்று தங்கத்தின் விலை மீண்டும் அதிகமானதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.
இந்த வாரம் முழுவதும் தொடர்ந்து ஏற்றத்தில் இருந்து வந்தது. தங்கத்தின் விலை நேற்றைய நாளில் குறைந்த நிலையில், இன்று அதிகரித்துள்ளது.
தங்கத்தின் விலை கடந்த சில நாள்களாகவே, தொடர்ந்து ஏற்ற இறக்கத்திலேயே உள்ளது. இருப்பினும், கடந்த இரண்டு நாள்களாகவே, தங்கத்தின் விலை குறைந்து வந்தது.
இன்றைய தினத்தில் அதாவது அக்டோபர் 13 ஆம் நாளின் நிலவரப்படி, ஆபரணத் தங்கம் (22 காரட்) ஒரு கிராமிற்கு ரூ.10 அதிகரித்து, 4,740 ரூபாயாகவும், ஒரு சவரனுக்கு ரூ.80 அதிகரித்து 37,920 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல, இன்று தூய தங்கம் (24 காரட்) ஒரு கிராமிற்கு ரூ.5,142 ஆகவும், ஒரு சவரனுக்கு 41,136 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை அதிகரித்த நிலையில், இன்று வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது. அதன் படி, ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 பைசாக்கள் குறைந்து 62.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிலோ வெள்ளி தற்போது ரூ.62,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…