ஏற்ற இறக்கத்துடன் கூடிய தங்கத்தின் விலை, இந்த வாரத்தில் தொடர்ந்து அதிகமாகி வருவதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியில் உள்ளனர்..
கடந்த சில நாள்களாகவே, தங்கத்தில் விலை சரிந்து வந்த நிலையில், கடந்த வாரத்தின் இறுதியில் இருந்து, மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறையும் தங்கத்தின் விலையை விட ஏறக்கூடிய தங்கத்தின் விலையே அதிகமாக உள்ளது.
இன்றைய தினத்தில் அதாவது அக்டோபர் 6 ஆம் நாளின் நிலவரப்படி, ஆபரணத் தங்கம் (22 காரட்) ஒரு கிராமிற்கு ரூ.5 அதிகரித்து, 4,840 ரூபாயாகவும், ஒரு சவரனுக்கு ரூ.40 அதிகரித்து 38,720 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல, 24 காரட் தூய தங்கத்தின் விலை ஒரு கிராமிற்கு 5,242 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, தூய தங்கம் (24 காரட்) ஒரு சவரனுக்கு 41,936 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் வெள்ளி விலை இன்று குறைந்துள்ளதால், வாடிக்கையாளர்கள் சற்று நிம்மதியுடன் இருக்கின்றனர்.. அதன் படி, ஒரு கிராமிற்கு 0.50 காசுகள் குறைந்து, ரூ.67.00 காசுகளாகவும், ஒரு கிலோ வெள்ளியின் விலை 66,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்றத்தில் இருப்பதால், பாமர மக்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…