ஏற்ற இறக்கத்துடன் கூடிய தங்கத்தின் விலை, கடந்த வார இறுதியில் சவரனுக்கு ரூ.240 குறைந்த நிலையில் தற்போது சவரனுக்கு ரூ.80 அதிகரித்துள்ளது. இது இல்லத்தரசிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாள்களாகவே, தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்திலேயே இருந்து வருகிறது. மேலும், தற்சமயத்தில் அத்தியாவசியத் தேவைக்காக பொதுமக்கள் தங்கம் வாங்குவது அதிகரித்து வருகிறது. அதன் படி, பண்டிகை காலத்தில் மட்டும் 25 ஆயிரம் கோடி ரூபாய்க்கு தங்கம் மற்றும் வெள்ளி வர்த்தகம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
ஏற்ற இறக்கத்திலேயே இருக்கும் தங்கத்தின் விலை, இன்று சவரனுக்கு ரூ.37,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய தினத்தில் அதாவது அக்டோபர் 31 ஆம் நாளின் நிலவரப்படி, ஆபரணத் தங்கம் (22 காரட்) ஒரு கிராமிற்கு ரூ.10 அதிகரித்து ரூ.4,715 ரூபாயாகவும், ஒரு சவரனுக்கு ரூ.80 அதிகரித்து 37,720 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், தூய தங்கம் (24 காரட்) ஒரு கிராமிற்கு 5,117 ரூபாயாகவும், ஒரு சவரனுக்கு ரூ.40,936 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை அதிகரித்த நிலையில், வெள்ளி விலையில் எந்த மாற்றமுல் இல்லாமல், சனிக்கிழமை விற்பனை செய்யப்பட்ட விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. அதன் படி, ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.63 ஆகவும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.63,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…