ஏற்ற இறக்கத்துடன் கூடிய தங்கத்தின் விலை, நேற்றைய நாளைத் தொடர்ந்து இன்றும் அதிகரித்துள்ளதால் இல்லத்தரசிகள் கவலையில் உள்ளனர்.
கடந்த சில நாள்களாகவே, தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்திலேயே இருந்து வருகிறது. நேற்று தங்கத்தின் விலை, அதிகரித்ததைத் தொடர்ந்து, இன்றும் அதிகரித்துள்ளதால் நகை வாங்குபவர்கள் கவலையில் உள்ளனர்.
ஏற்ற இறக்கத்திலேயே இருக்கும் தங்கத்தின் விலை, இன்று சவரனுக்கு ரூ.38,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய தினத்தில் அதாவது நவம்பர் 10 ஆம் நாளின் நிலவரப்படி, ஆபரணத் தங்கம் (22 காரட்) ஒரு கிராமிற்கு ரூ.5 அதிகரித்து ரூ.4,815 லிருந்து 4,820 ரூபாயாகவும், ஒரு சவரனுக்கு ரூ.40 அதிகரித்து 38,520 ரூபாயிலிருந்து ரூ.38,560 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், தூய தங்கம் (24 காரட்) ஒரு கிராமிற்கு 5,217 ரூபாயில் இருந்து ரூ.5,222-க்கும் ஒரு சவரனுக்கு ரூ.41,736 ரூபாயில் இருந்து ரூ.41,776-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை அதிகரித்த நிலையில், வெள்ளி விலை சரிந்துள்ளது. அதன் படி, ஒரு கிராம் வெள்ளியின் விலை 0.40 பைசா சரிந்து ரூ.67.00 ஆகவும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.67,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்றைய நாளைத் தொடர்ந்து, தங்கத்தின் விலை இன்று அதிகரித்ததால், நகை வாங்குபவர்களிடையே குழப்பம் நிலவுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…