சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் பெட்ரோல், டீசல், விலையை இந்திய ரூபாயின் மதிப்பில் தினசரி எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன.
இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத விலையேற்றத்தை சந்தித்து வருகிறது. இந்நிலையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு அதிரடியாக குறைத்தது. இதனால் டீசல் 7 ரூபாய் மற்றும் பெட்ரோல் 9.50 ரூபாய் குறைந்தது.
இந்தியாவில் நேற்று கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்ததால் பெட்ரோல் டீசல் விலையும் உயரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதனையடுத்து, சென்னையில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையாகி வருகிறது. அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனையாகி வருகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்த போதிலும் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை என அறிவித்துள்ளது. இதனால், பொது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…