பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த 166 நாள்களாகவே எந்த மாற்றமுமின்றி அதே விலைக்கு விற்பனை செய்யப்பட்டது.
சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப கச்சா எண்ணெய் விலை மற்றும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன. அதன் படி, இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் இந்திய ரூபாயின் மதிப்பில் நிர்ணயம் செய்து வருகின்றன.
கடந்த சில மாதங்களாகவே, பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த வித மாற்றமும் இல்லாமல் உள்ளது.
இந்த நிலையில், தொடர்ந்து 166 ஆவது நாளாக, இன்றும் பெட்ரோல் டீசல் விலை எந்த வித மாற்றமும் இல்லாமல் இருந்து வருகிறது. அதன் படி, சென்னையில் பெட்ரோல் விலை ரூ.102.63 ஆகவும், டீசல் விலை ரூ.94.24 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்றாவது குறையும் அல்லது அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்றும் எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இது வாகன ஓட்டிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
7 மாதம் கழித்து முதல் முறையாக நவம்பர் 1 ஆம் தேதியில் மத்திய அரசு ஆந்திரா, தெலுங்கானா, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை தலா 40 காசுகள் குறைத்துள்ளது. ஆனால், தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை எனவும், இனி வரும் காலங்களில் விலை குறையலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், நவம்பர் 1 ஆம் நாளான நேற்று 7 மாதம் கழித்து முதல் முறையாக பெட்ரோல், டீசல் விலையை தலா 40 காசுகள் குறைந்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து, ஆந்திரா, தெலுங்கானா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு இன்று முதலே அமலுக்கு வந்துள்ளது. அதே சமயம், தமிழகத்தில் விலை குறைக்கப்படவில்லை. இருந்தபோதிலும், தமிழகத்திலும் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…