கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக, விலை மாற்றமடையாத பெட்ரோல் விலை, கடந்த இரண்டு நாள்களாக ஏற்றமும், இறக்கமும் கொண்டு வருகிறது.
சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப கச்சா எண்ணெய் விலை மற்றும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன. அதன் படி, இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் இந்திய ரூபாயின் மதிப்பில் நிர்ணயம் செய்து வருகின்றன.
நேற்றைய விலையைத் தொடர்ந்து இன்று 10 பைசாக்கள் அதிகமாகி பெட்ரோல் விற்பனை செய்யப்படுகிறது. அதன் படி, 102.63-லிருந்து 102.73 ஆக உயர்ந்துள்ளது.
அதன் படி, இன்று சென்னை நிலவரப்படி, பெட்ரோல் விலை 102.73 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, டீசல் விலையும் இன்று மாற்றம் அடைந்துள்ளது. டீசல் விலையும் 9 பைசாக்கள் உயர்ந்து 94.24 லிருந்து, 94.33 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை இரண்டுமே உயர்ந்துள்ளதால், வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…