Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Ration Card Latest News: தமிழக அரசு அறிவித்த சூப்பர் அறிவிப்பு….! ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சி….!

Gowthami Subramani July 08, 2022 & 10:45 [IST]
Ration Card Latest News: தமிழக அரசு அறிவித்த சூப்பர் அறிவிப்பு….! ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சி….!Representative Image.

Ration Card Latest News: தமிழக அரசு, குடும்ப அட்டைதாரர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்றை வழங்கியுள்ளது.

மத்திய மற்றும் மாநில அரசு, மக்களின் நலனுக்காக பல்வேறு வகையான சிறப்பு திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன. அந்த வகையில், தற்போது, தமிழக அரசு அறிவித்துள்ள இந்த அறிக்கையால், தமிழக மக்கள் மிகுந்த ஆனந்தத்தில் உள்ளனர்.

குறைதீர்ப்பு முகாம்

அதன் படி, தமிழக அரசு அறிவிக்கப்பட்ட படி, தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பயன்படும் படி, குறைதீர்ப்பு முகாம் ஒன்றை வரும் ஜூலை மாதம் 9 ஆம் நாள் நடத்த திட்டமிட்டுள்ளது.

அட்டையின் முக்கியத்துவம்

ரேஷன் அட்டை எனப்படும் குடும்ப அட்டை, அனைவருக்கும் கிடைக்கக் கூடிய ஒரு சிறப்பான பயனாகும். வறுமைக் கோட்டுக்குள் கீழ் இருக்கும் ஏழை எளிய மக்களுக்கு உதவக் கூடிய வகையில், அரசு தரப்பிலிருந்து இந்த அட்டை வழங்கப்படுகிறது. இதன் மூலம், இலவசமாகவும், மலிவு விலையிலும் உணவுப் பொருள்களை வாங்கிக் கொள்ளலாம். மேலும், நிதியுதவி போன்ற அரசு உதவிகளும், ரேஷன் அட்டையின் மூலம் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

முகாமில்

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ரேஷன் அட்டை திட்டம், அனைவரிடத்திலும் இருப்பதற்காகவும், அதில் உள்ள குறைகளைச் சரி செய்யும் நோக்கத்திலும், குறைதீர்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அதன் படி, இந்த ஜூலை மாதம் 2022 ஆம் ஆண்டிற்கான குறைதீர்ப்பு முகாம், நாளை அதாவது ஜூலை 9, 2022 சனிக்கிழமை நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாதந்தோறும்

தமிழக அரசு மக்களுக்கு உரிய நலன்களைச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு மாதந்தோறும் இந்த குறைதீர்ப்பு முகாமை நடத்தி வருகிறது. இந்த அருமையான திட்டத்தின் மூலம், மக்கள் எளிதாக இந்த முகாமிற்கு சென்றடைந்து ரேஷன் அட்டை தொடர்பான அனைத்து குறைகளையும் அறிவித்து அதனை சரி செய்யலாம்.

என்னென்ன அப்டேட்டுகள்

பொதுவாக, ஒருவர் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்லும் போது, அவர் குடிபெயர்ந்த இடத்திற்கான முகவரியை வைத்து ரேஷன் அட்டையைப் பெறலாம். இது போன்றவற்றிற்கான முகவரி மாற்றம் இந்த முகாமில் செய்து தரப்படுகிறது. மேலும், அட்டைகளில் பெயரை சேர்த்தல், நீக்குதல், தொலைபேசி எண்ணை இணைத்தல் அல்லது பதிவு செய்தல் போன்றவற்றை செய்து கொள்ளலாம். புதிதாக குடும்ப அட்டைகளைப் பெறும் நபர்களின் மனுக்களைப் பதிவு செய்தல் போன்ற பல்வேறு சேவைகளை இந்த முகாமின் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, மக்கள் தங்களது குறைகளை, இந்த குறை தீர்ப்பு முகாமின் வாயிலாக தீர்த்துக்கொள்ளலாம்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்