Cryptocurrency Impacts in Tamil: கிரிப்டோகரன்சி தெளிவான ஆபத்து என்று இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். ஊகத்தின் படியோ, நம்பிக்கையின் அடிப்படையிலோ, பணம் சம்பாதிக்க முடியும் என்பது எந்த விதத்தில் பொருந்தும்.
கிரிப்டோகரன்சி (What is Cryptocurrency?)
நாள்தோறும் நாம் கிரிப்டோகரன்சி என்ற வார்த்தையை கேட்டுக் கொண்டிருப்போம். ஆனால், இது ஒரு முதலீடுகளை ஈட்டும் தளம் என்று மட்டும் நம்புகின்றனர். குறிப்பாக இது, எந்த வித அடிப்படை கருத்தையும் வைத்து செயலாற்றப்படுவதில்லை. இவ்வாறு முதலீடுகளை ஈட்டுவதற்காக போட்டப்படும் தொகை, அவர்களின் நம்பிக்கை அல்லது ஊகத்தின் அடிப்படையிலே செயல்படுகிறது. எந்த வித அடிப்படைக் கருத்தையும் கொண்டு இயங்காத இந்த கிரிப்டோகரன்சிக்கு ஏராளக்கணக்கான பேர் முதலீடு செய்து வருகின்றனர்.
கிரிப்டோ மோசடிகள் (Cryptocurrency Impacts in Tamilnadu)
இந்த கிரிப்டோவில் உள்ள மோசடிகளைப் பற்றி யாரும் தெரிந்து கொள்ளாமல் இருப்பதே இதற்கான முக்கிய காரணமாக அமைகிறது. ஏதோ ஒரு யூகத்தில் செயல்படும் இந்த கிரிப்டோகரன்சி மூலம், எவ்வாறு முதலீடுகளை ஈட்ட முடியும். சமீபத்தில், நம் தமிழ்நாட்டில் உள்ள மதுரையில் கிரிப்டோ மூலம் மோசடி நடப்பதாகக் கூறப்பட்டது. இது போன்ற எண்ணற்ற மோசடிகள் குறித்து தகவல்கள் வெளியிடப்படாமலும் இருக்கிறது.
ஆர்பிஐ கவர்னர் கருத்து
இந்த கிரிப்டோகரன்சி மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், ஆர்பிஐ கவர்னராக விளங்கும் சக்திகாந்த தாஸ் இது குறித்த விவரங்களைப் பதிவிட்டுள்ளார் (Cryptocurrency Impacts in Tamil Economy).
ரிசர்வ் வங்கியின் 25 ஆவது நிதி நிலைத்தன்மை அறிக்கையின் படி, கிரிப்டோ சொத்து சுற்றுச்சூழல் அமைப்பு வளர்ந்து வரும் அச்சுறுத்தல் எனக் கூறியுள்ளது. மத்திய வங்கி கிரிப்டோ சொத்து சந்தைகள் மற்றும் அவற்றின் ஒழுங்குபடுத்தப்பட்ட நிதி அமைப்பு ஆகியவற்றிற்கு இடையேயான இணைப்பு அதன் சந்தைகளுடன் தொடர்புடைய பல்வேறு வகையான பாதிப்புகளை முன்னிலைப் படுத்துகிறது (Cryptocurrency Impacts in Tamil Industry).
பல்வேறு பங்குதாரர்கள் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்ட ஆலோசனையின் படியே, கிரிப்டோகரன்சிகள் ஆபத்து எனக் கூறப்படுகிறது.
அறிக்கையில் கொடுக்கப்பட்டவை
அதன் படி, ரிசர்வ் வங்கி அறித்துள்ள அறிக்கையின் படி, இந்த பணவியல் கொள்கையின் இறுக்கம் பணப்புழக்க நிலைமைகளில் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வருவதாக இருக்கிறது. இது பணவீக்க அழுத்தங்களை உண்டாக்குகிறது (Cryptocurrency Disadvantages in Tamil).
இதற்கான, ஆரம்ப நிலைகளில் ஒன்று கிரிப்டோவிலிருந்து தொடர்கிறது. இதிலிருந்து விடுவிக்கப்படுவதற்கும், நுகர்வோர் மற்றும் ஒழுங்கு முறை பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், பாதுகாப்பு அவசியத்தை மேற்கொள்வது அவசியமாகும்.
வங்கித்துறை அறிவிப்பு
அதே போல, வங்கித்துறை அறிவித்துள்ள அறிக்கையின் படி, திட்டமிட்ட வணிக வங்கிகளின் மூலதனம், சொத்துவிகிதம் (CRAR) போன்றவை அதிகபட்சமாக 16.7% உயர்ந்துள்ளது. இதே சமயத்தில், வங்கிகளின் மொத்த செயல்படாத சொத்துக்களின் விகிதம் (GNPA), இந்த ஆறு ஆண்டுகளில் குறைந்ததாகக் கூறப்படுகிறது. அதன் படி, GNPA இந்த மார்ச் 2022 ஆம் ஆண்டில் 5.9% ஆக உள்ளது (Cryptocurrency Disadvantages in Tamilnadu).
இருந்தபோதிலும், இந்த பணவீக்க அழுத்தங்கள், அரசியல் அபாயங்கள் மற்றும் நெருக்கமாக இருக்கும் இந்தப் பொருளாதார மீட்சிப் பாதை போன்றவை நன்றாக இருப்பதற்கு மத்திய அரசு முயற்சி எடுத்துக் கொண்டு வருவதாகவும் அறிக்கை கூறியுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…