Share Market Live News: இன்றைய ஆரம்ப வர்த்தகத்தில் இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கியுள்ளதால், முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நேற்றைய பங்குச் சந்தையின் தொடக்கத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவை வீழ்ச்சியில் தொடங்கப்பட்டது. இருந்த போதிலும், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 246.47 புள்ளிகள் அதிகரித்து 54,767.62 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 62.05 புள்ளிகள் உயர்ந்து 16,340.55 புள்ளிகளாகவும் நிறைவடைந்துள்ளது. அதன் படி, இன்றைய பங்குச் சந்தையின் தொடக்கத்தில், சென்செக்ஸ் 1.13% அல்லது 619.97 புள்ளிகள் அதிகரித்து 55,486.12 புள்ளிகளாக உள்ளது. அதே போல, நிஃப்டி 1.13% அல்லது 185.30 புள்ளிகள் அதிகரித்து 16,562.80 புள்ளிகளாக உள்ளது.
மேலும், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு இன்று 79.97 ஆக உள்ளது. இது நேற்றைய மதிப்பான 80ஐ விட மிகச் சிறிய அளவில் குறைந்து காணப்படுகிறது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…