டாடாவிடம் விற்கப்பட்ட முன்னாள் பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவில் கடந்த 3 மாதங்களில் 1,000 புகார்கள் வந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலமாக விமானங்களில் கோளாறு ஏற்படுவது அதிகரித்து வரும் நிலையில், விமானத் துறை உண்மையிலேயே சவாலான கட்டத்தை எதிர்கொண்டு வருகிறது.
கடந்த சில நாட்களாக, ஸ்பைஸ்ஜெட், விஸ்தாரா மற்றும் செவ்வாயன்று, கோ ஏர் விமானங்கள், பல்வேறு கோளாறுகளால் பாதிக்கப்பட்ட பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களில் ஏர் இந்தியாவுக்கு எதிராக ஏறக்குறைய 1000 பயணிகள் புகார்களைப் பெற்றுள்ளதாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
பயணக் கட்டணத்தைத் திரும்பப் பெறுதல், விமானங்களுக்கு இருக்கைகளை விட அதிக முன்பதிவு செய்தல், ஊழியர்களின் நடத்தை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தொடர்பான பிரச்னைகள் உள்ளன என்று சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் வி கே சிங் தெரிவித்தார்.
ஏர் இந்தியா உள்ளிட்ட விமானப் போக்குவரத்து தொடர்பான புகார்களை விமானப் போக்குவரத்து அமைச்சகம் பெற்று வருகிறது, பயணக் கட்டணத்தைத் திரும்பப் பெறுதல், விமானச் சிக்கல்கள், ஊழியர்களின் நடத்தை, பேக்கேஜ் பிரச்னைகள், விமானங்களை அதிகமாக முன்பதிவு செய்தல் போன்ற பல்வேறு பிரச்னைகள் குறித்து சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தனது எழுத்துப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ராஜ்யசபாவில் ஒரு கேள்விக்கு அளித்த பதிலில் அமைச்சர் வி.கே.சிங், கடந்த மூன்று மாதங்களில் ஏர் இந்தியா மீது மட்டும் இதுபோன்ற சுமார் 1,000 புகார்கள் வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையமான டிஜிசிஏ ஜூன் 14 அன்று, செல்லுபடியாகும் டிக்கெட் வைத்திருக்கும் பயணிகளுக்கு ஏறுவதற்கு மறுத்ததற்காகவும், அதன்பின் அவர்களுக்கு கட்டாய இழப்பீடு வழங்காததற்காகவும் ஏர் இந்தியாவுக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…