stock market : மும்பை பங்குச் சந்தை நேற்று சென்செக்ஸ் கடும் வீழ்ச்சி அடைந்த நிலையில் தற்போது தான் ஓரளவு முன்னேறிக்கொண்டு வருகிறது. இந்த உயர்வு முதலீட்டாளர்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் கடந்த சில நாட்களாக மிகப்பெரிய அளவில் சரிந்து வருகிறது. இதனால் முதலீட்டாளர்கள் கோடிக்கணக்கான பணத்தை இழந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், இன்று காலை பங்கு சந்தை உயர்ந்து காணப்படுகிறது. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் இன்று 400 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளது. அதன்படி 52, 600 என்ற புள்ளி அடிப்படையில் வர்த்தகமாகி வருகிறது.
இதனையடுத்து, தேசிய பங்குச் சந்தை (நிஃப்டி)யில் சுமார் 120 புள்ளிகள் வரை உயர்ந்ததுள்ளது. அதன்படி, 115670 எபுள்ளி அடிப்படையில் வர்த்தகமாகி வருகிறது.
தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் பங்குச்சந்தை உயர்ந்து வருவது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…