தமிழகத்தில் பொதுத் தேர்வுக்கான நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது. 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவிகள் மிகவும் விறுவிறுப்பாக தங்கள் தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருக்கின்றனர். பிராக்டிகல் எக்ஸாம் முடிந்து பின்னர் பொதுத் தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டு ஏற்பாடுகள் நடந்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் தற்போது வெளியான தகவல் என்னவென்றால், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள் மதிப்பீடு செய்வதற்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் படி, 12 ஆம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள்களை ஏப்ரல் 11 துவங்கி ஏப்ரல் 21 ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்றும், 11 ஆம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாளை ஏப்ரல் 15 ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 21 ஆம் தேதி முடிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…