டெல்லி: எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புக்கான நெக்ஸ்ட் தேர்வு இந்தாண்டு முதல் அமல்படுத்தப்படுவதாக தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.
நெக்ஸ்ட் தேர்வு படி 1 மற்றும் படி 2 என இரண்டு படிகளில் நடத்தப்படும். விண்ணப்பதாரர்கள் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்த 10 ஆண்டுகளுக்குள் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்தியாவில் இளநிலை மருத்துவ படிப்புக்கான எம்பிபிஎஸ் ஐந்தரை ஆண்டுகளை கொண்டது.
இதில் கல்லூரியில் நான்கரை ஆண்டுகள் படித்த பின்னர் ஓராண்டு பயிற்சி மருத்துவராக பணியாற்றுகின்றனர்.அதனைத் தொடர்ந்து மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்து மருத்துவராக பணியாற்றுகின்றனர்.
இந்நிலையில், எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ படிப்புக்கான நெக்ஸ்ட் தேர்வு இந்தாண்டு முதல் அமல்படுத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 2019ம் ஆண்டு பேட்ச் மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் அமலுக்கு வருகிறது.
நெக்ஸ்ட் தேர்வில் தேர்வு பெற்றால்தான் பயிற்சி மருத்துவர் பணியை செய்ய முடியும்.இரு தேர்வுகளாக மே மற்றும் நவம்பர் மாதங்களில் தேர்வுகள் நடக்கும். வரும் 28 ம் தேதி நாடு முழுவதும் மாதிரி தேர்வு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நெக்ஸ்ட் தேர்வு நடத்துவதை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்று சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. மத்திய அரசு இந்த தேர்வை கைவிட வேண்டும் என்று ஏற்கனவே முத்ல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…