Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

குரூப்-4 பதவிக்கான காலியிடங்கள் அதிகரிப்பு - டிஎன்பிஎஸ்சியின் புதிய பட்டியல் ரிலீஸ்!

Saraswathi Updated:
குரூப்-4 பதவிக்கான காலியிடங்கள் அதிகரிப்பு - டிஎன்பிஎஸ்சியின் புதிய பட்டியல் ரிலீஸ்! Representative Image.

தமிழகத்தில் குரூப்-4 பதவிகளுக்கான காலியிடங்கள் 10,292ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம் அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் கிராமநிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி எனப்படும் அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப்-4 தேர்வு நடத்தப்பட்டுவருகிறது. அதன்படி கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதம் குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. 20 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில், அதே ஆண்டு ஜூலை மாதம் நடத்தப்பட்ட தேர்வை 18, 36, 535 பேர் எழுதினர்.

இதற்கான தேர்வு முடிவுகள் கடந்த 2023ஆம் ஆண்டு மார்ச் 24ம் தேதி வெளியிடப்பட்டது. ஏற்கனவே 7301 காலிப்பணியிடங்களுக்கான இந்தத் தேர்வு நடத்தப்பட்ட நிலையில், காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டுமென பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்தன. அதைத் தொடர்ந்து, கடந்த மாதம் (ஜூன்.2023) வரையிலான நிலவரப்படி குரூப்-4 பதவிகளில் உள்ள காலிப் பணியிடங்களை உயர்த்தி, அது தொடர்பான அதிகாரப்பூர்வ பட்டியலை டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. 

அதன்படி, 5321 இளநிலை உதவியாளர், 3377 தட்டச்சர், 1079 சுருக்கெழுத்தர், 425 கிராமநிர்வாக அலுவலர், 69 பில் கலெக்டர், 20 கள உதவியாளர், இருப்புக் காப்பாளர் பணியிடம்(1) உட்பட மொத்தம் 10,292 காலியிடங்கள் குரூப்-4 பதவிகளில் இருப்பதாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்