Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Tamilnadu News Live : பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி தொடக்கம்..?

Muthu Kumar May 18, 2022 & 12:01 [IST]
Tamilnadu News Live : பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி தொடக்கம்..?Representative Image.

Tamilnadu News Live : தமிழகத்தில் கடந்த 5-ந்தேதி பிளஸ்-2 வுக்கும், 6-ந்தேதி 10ம் வகுப்பிற்க்கும், 10-ம் தேதி பிளஸ்-1க்கும் பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த தேர்வை சுமார் 26 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதி வருகிறார்கள்.

பலத்த பாதுகாப்பு

வினாத்தாள் கசிவு ஏற்படாமல் தேர்வை நடத்தி முடிக்க வேண்டும் என்பதில் தேர்வுத்துறை உறுதியாக உள்ளது. இதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுகின்றன. தேர்வுகள் முடிந்தவுடன் விடைத்தாள்கள் போலீஸ் பாதுகாப்புடன் பாதுகாப்பு மையங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.

பொதுத்தேர்வு விடைத்தாள்கள்

பிளஸ்-2 மாணவர்களுக்கு 3 தேர்வுகள் மட்டுமே எழுத வேண்டும். 10-ம் வகுப்பு மாணவர்கள் இன்னும் 4 தேர்வுகள் எழுத வேண்டும். அதன்படி, இந்த மாதம் 31ம் தேதியுடன் தேர்வுகள் முழுமையாக முடிந்து விடுகின்றன. இன்னும் ஒரு வாரம் மட்டுமே தேர்வுகள் நடைபெற வேண்டும். அதனால் விடைத்தாள்களை திருத்தும் பணிக்கான வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

விடைத்தாள்கள் இடமாற்றம்

இதுவரையில் நடந்து முடிந்த தேர்வு விடைத்தாள்கள் இடமாற்றம் செய்யும் பணி தொடங்கியுள்ளது. அதன்படி, ஒரு மாவட்டத்தில் நடந்த தேர்வு விடைத்தாள்கள் வேறு மாவட்டங்களுக்கு திருத்துவதற்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

அதேபோல ஒவ்வொரு மாவட்டத்திலும் விடைத்தாள் மாற்றம் செய்யும் பணி முதன்மை கல்வி அதிகாரிகள் மேற்பார்வையில் நடைபெறுகிறது. மேலும் விடைத்தாள்கள் போலீஸ் பாதுகாப்புடன் பாதுகாப்பு மையங்களில் வைக்கப்படுகின்றன.

விடைத்தாள் திருத்தும் பணி 

அனைத்து மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு முடிவடந்தவுடன் ஜூன் 1ம் தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கும் என மேல்அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் எத்தனை மையங்களில் விடைத்தாள் திருத்தப்படும், எத்தனை ஆசிரியர்கள் இதில் ஈடுபடுகிறார்கள் என்ற விவரம் விரைவில் தெரிவிக்கப்படும் எனவும் கூறினார்.

பொதுத்தேர்வு முடிவு 

கொரோனா தொற்று காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு விடைத்தாள்கள் முழுமையாக இந்த ஆண்டு திருத்தப்படுகிறது. அதனால் இந்த பணி முழு வீச்சில் நடைபெறும். அதன்படி, 2 வாரத்தில் திருத்தி முடிக்கப்பட்டு ஜூன் இறுதியில் பொதுத்தேர்வு முடிவு வெளியிட அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்