TNPSC Preparation Tips in Tamil: டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இன்னும் சிறிது நாள்களே தேர்வு இருக்கும் பட்சத்தில், தேர்வைக் கையாள்வதற்கான முறைகளைப் பற்றித் தெரிந்து கொண்டிருக்க வேண்டும்.
கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கொரோனா சூழ்நிலை காரணமாக, தேர்வு எதுவும் நடத்தப்படவில்லை. இந்த ஆண்டு கொரோனா தொற்று சற்று கட்டுப்பாட்டுடன் இருப்பதால், தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. தமிழக அரசு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்குத் தேர்வுகள் நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். அந்த வகையில், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தேர்வுகள் நடத்தப்படாத நிலையில், இந்த ஆண்டு குரூப் 4 தேர்வுக்கு மட்டும் 20 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்திருந்தது.
அதன் படி, இந்தத் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்று ஏராளக்கணக்கானோர் கோச்சிங் க்ளாஸ் சேர்ந்து படிப்பர். ஆனால், ஒரு சில பேருக்கு க்ளாஸ் போக முடியாத நிலை ஏற்படும். வீட்டிலேயே டிஎன்பிஎஸ்சி தேர்வுக்வு கலந்து கொள்ள நினைப்பவராக இருந்தால், பின்வரும் முறைகளைப் பின்பற்றி தேர்வுக்கு தயாராகுங்கள். இந்த முறைப்படி படித்தால், டிஎன்பிஎஸ்சி நல்ல மதிப்பெண்கள் பெறுவதற்கு வழிவகுக்கும்.
நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்கள்
தேர்வுக்குத் தயாராகும் முன், கீழே கொடுக்கப்பட்டுள்ள விஷயங்களை மனதில் நிறுத்தி வைக்க வேண்டும் (TNPSC Group 4 Preparation Tips in Tamil).
முயற்சி, பயிற்சி- இவை இரண்டுமே வாழ்விற்கு வெற்றியை வழிவகுக்கும். இதில், டிஎன்பிஎஸ்சி தேர்விற்கு வீட்டிலேயே எப்படி தயாராகலாம் என்பதைப் பற்றி இங்குக் காண்போம்.
வீட்டிலேயேத் தயாராகும் முறைகள்
திட்டமிடல்
தேர்வுக்கு இன்னும் குறைந்த நாள்களே இருப்பதால், தேர்வுக்கு தயாராக தெளிவாக திட்டமிட வேண்டும். குறைந்தது ஆறு மாதங்களுக்கு முன்பே தேர்வுக்குப் படிக்கத் தொடங்க வேண்டும். TNPSC தேர்வில் கேட்கப்படும் தாள்களைப் பற்றி ஆராய வேண்டும். எந்த நேரத்தில் எதைப் படிக்கலாம் என்பதையும் ஆராய வேண்டும் (TNPSC Today Current Affairs in Tamil).
முந்தைய தேர்வுத் தாள்கள்
பெரும்பாலும், இது வரை டிஎன்பிஎஸ்சி தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் முந்தைய பாடத்திட்டங்களிலிருந்தும் கேட்கப்பட்டவையாக உள்ளன. எனவே, டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு முந்தைய ஆண்டுகளில் கேட்கப்பட்ட தேர்வுத் தாள்களைப் படிக்க வேண்டும். இந்த கேள்விகள் அப்படியே வராவிட்டாலும், இந்த மாடலில் ஆவது தாள் இருக்கும். இது தேர்வுக்கான பேட்டர்னை மனதில் நிறுத்துக் கொள்ள உறுதுணையாக இருக்கும்.
கடினமானவற்றில் சிறப்பு கவனம்
வீட்டில் இருந்த படி, தேர்வுக்கு தயாராகும் போது, அதிக நேரம் கிடைக்கும். இதனால், கடினமாக இருக்கும் பாடங்களில் மிகச் சிறந்த கவனம் செலுத்துவது அவசியம். எளிமையான தலைப்புகளைக் குறைவான நேரத்தையும், கடினமான தலைப்புகளுக்கு அதிகமான நேரத்தையும் செலவிட்டு தேர்தலில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். அதோடு, எளிதில் குழப்பங்களைத் தீர்த்து, சரியானவற்றை மனதில் நிறுத்த வேண்டும்.
சரியான நேரத்தைக் கையாளுதல்
அனைத்து விஷயங்களிலும், நேரம் என்பது முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. இவற்றில் சரியான நேரத்தை நாம் தான் தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். எந்த அளவில் பாடங்களை எளிதில் புரியும் வண்ணம் படிக்கிறமோ, அந்த அளவிற்கு நம்மால் நேரத்தைக் கையாள முடியும். மிக அதிகமான நேரத்தை ஒரே பாடத்தில் செலவிடுவது, தேர்விற்கு முந்தைய நாள் எடுத்து படிப்பது போன்றவற்றை ஒதுக்கி சரியாக நேரத்தைக் கையாண்டு தேர்வில் வெற்றி பெறலாம் (TNPSC Instructions to Candidates in Tamil).
எத்தனை பாடங்கள் படித்திருந்தாலும், எல்லாவற்றையும் தெரிந்திருந்தாலும், நாம் தேர்வைக் கண்டு அச்சப்படாமல் இருக்க வேண்டும். தேர்வறையில் குழப்பத்துடனும், பதட்டத்துடனும் இருக்கக் கூடாது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்....
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…