Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

SSC Notification 2022: அடுத்த 6 மாதத்திற்குள் 42,000 பேருக்கு வேலை…! எஸ்எஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!

Gowthami Subramani [IST]
SSC Notification 2022: அடுத்த 6 மாதத்திற்குள் 42,000 பேருக்கு வேலை…! எஸ்எஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!Representative Image.

SSC Notification 2022: 2022 ஆம் ஆண்டின் இறுதிக்குள், 42,000 பேர் பணியமர்த்தப்படுவார்கள் என மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

அக்னிபத் திட்டம்

மத்திய அரசு “அக்னிபத்” திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இத்திட்டத்தின் படி, பணியில் சேரப்படும் நபர்களில் 25% பணியாளர்களுக்கு மட்டுமே நிரந்தர வேலைவாய்ப்பு அளிக்கப்படும் எனவும், மீதி 75% பேர் வெளியேற்றப்படுவார்கள் எனவும் கூறப்படுகிறது. மேலும், இந்த 75% பேருக்கு பென்சன் வழங்கப்பட மாட்டாது எனவும், இவர்களுக்குப் பல்வேறு வகையான சலுகைகள் வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது (SSC Notification 2022).

திட்டத்திற்கு எதிர்ப்பு

ஆனால், மத்திய அரசு வெளியிட்ட இத்திட்டத்திற்கு பல்வேறு வகைகளில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இந்த திட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது. மேலும், இத்திட்டத்தின் கீழ், நான்கு ஆண்டு நிறைவு செய்த பிறகு அக்னி வீரர்கள் மீண்டும் சமூகத்துக்கு அனுப்பி வைக்கப்படும் போது, அவர்கள் எந்த வகையில் வேறு வேலையினைப் பெற முடியும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன (SSC Recruitment 2022 Apply Online).

தேவைக்கேற்ப தேர்ந்தெடுக்கப்படுவர்

அக்னிபத் திட்டத்தின் மூலம், ராணுவத்தின் தேவைக்கேற்ப ஆட்சேர்ப்பு செயல்முறை நடத்தப்படும். 25% பணியாளர்களுக்கு நிரந்தர ராணுவப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர் (Agnipath Scheme 2022 Apply Online). இத்திட்டத்தினா, கனவுகள் சிதைக்கப்படுவதாகக் கூறி, பல்வேறு இடங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இருந்தபோதிலும், பல்வேறு துறைகள் அக்னிபத் வீரர்களுக்கு நான்கு ஆண்டுகள் பிறகு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என சில அறிவிப்புகளும் வெளிவந்துள்ளன (SSC Jobs List with Salary).

முப்படைத்தளபதிகளின் அறிக்கை

இவ்வாறு போராட்டங்கள் எழுந்து கொண்டிருக்கும் நிலையில், முப்படைத்தளபதிகள் இந்த திட்டத்திலிருந்து பின்வாங்க முடியாது எனக் கூறியுள்ளனர். இந்த திட்டத்தின் மூலம், நிதி இழப்பு தவிர்க்கப்படும். பல்வேறு பயன்கள் கிடைக்கப்பெறும் என கூறப்பட்டு வருகின்றன. மேலும், இத்திட்டத்தின் மூலம் விரைவாக ஆட்சேர்ப்பு நடத்தப்படும் எனவும் முப்படைத் தளபதிகள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர் (SSC NIC in Registration).

தேர்வாணையத்தின் அறிவிப்பு

அவ்வாறே, மத்திய பணியாளர் தேர்வாணையம், ட்விட்டர் தளத்தில் ஒரு சில அறிவிப்பை வெளியிட்டது. அதில் குறிப்பிட்டதாவது, “இந்திய அரசில் ஏராளக்கணக்கான வேலை வாய்ப்புகள் அளிக்கப்பட உள்ளன. அதன் படி, இந்த 2022 ஆம் ஆண்டு இறுதிக்குள், 15,427 பதவிகளுக்கு பணி நியமன முடிவுகள் எடுக்கப்பட உள்ளது. மேலும், இதில் 42,000 பேர் பணியமர்த்தப்பட உள்ளனர். அது மட்டுமல்லாமல், 67,728 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளது (SSC Notification 2022 in Tamil).

மேலும், கடந்த ஜூன் மாதம் 14 ஆம் நாள் அனைத்து துறைகள் மற்றும் அமைச்சகங்களின் மனித வள நிலவரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஆய்வு செய்தார். அதன் படி, அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் மத்திய அரசுத் துறையில் 10 லட்சம் அளவிலான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டார் ( List of Jobs in SSC 2022).

மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையின் படி, 42,000 பேருக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு, அரசு வேலை பெற வேண்டும் என நினைக்கும் நபர்களுக்கு பெரும் மகிழ்ச்கியை அளித்துள்ளது (SSC Latest Jobs Notification 2022).

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்