திண்டுக்கல் அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலில் காலியாக உள்ள தட்டச்சர், நூலகர், கணினி பொறியாளர், ஓட்டுநர், நடத்துனர், ஆசிரியர் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கீழும் 281 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணிகளுக்கு எந்தவித எழுத்துத் தேர்வும் இல்லை. நேர்காணல் மூலம் மட்டுமே நியமனங்கள் நடைபெற உள்ளன. எனவே, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பணி விபரம்:
வெளித்துறை பிரிவு (தட்டச்சர், நூலகர்) - 174 பணியிடங்கள்
தொழில்நுட்ப பிரிவு (கணினி பொறியாளர், இளநிலை பொறியாளர்) - 82 பணியிடங்கள்
உள்துறை பிரிவு (நாதஸ்வரம், தவில்) - 14 பணியிடங்கள்
ஆசிரியை, ஆய்வக உதவியாளர் - 19 பணியிடங்கள்
தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10th, 08th, 12th, ITI, Diploma, Degree, MBBS, BE, B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும், இறை நம்பிக்கை உடையவராகவும் இந்து மதத்தைச் சேர்ந்தவராகவும் இருத்தல் வேண்டும்.
சம்பளம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.11,600/- ரூ.1,16,200/- சம்பளமாக வழங்கப்படும் .
வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 01.07.2022 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 45 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் palanimurugan.hrce.tn.gov.in என்ற அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஏப்ரல் 07, 2023 தேதி மாலை 5.45 மணிக்குள் நேரிலோ/ அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம். (ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாது)
அனுப்ப வேண்டிய முகவரி:
இணை ஆணையர்/ செயல் அலுவலர்,
அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்,
பழனி, திண்டுக்கல் மாவட்டம் - 624 601.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.04.2023
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…