சாலை ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் 761 சாலை ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச கல்வித்தகுதியாக I.T.I. Certificate in Civil Draughtsmenship நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும் Diploma in Civil Engineering படித்திருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் தேர்வர்களுக்கு 01.07.2023 அன்று 37 வயது பூர்த்தியடையாமல் இருக்க வேண்டும். அதே நேரம் எஸ்சி, எஸ்டி, எம்பிசி, பிசி ஆகிய பிரிவினருக்கு வயது வரம்பு எதுவும் இல்லை.
எழுத்துத் தேர்வின் மூலம் இந்த பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும். எழுத்துத் தேர்வில், முதல் தாளில் Draughtsman (Civil) சம்பந்தப்பட்ட பாடங்களில் இருந்து வினாக்கள் இடம்பெறும். இரண்டாம் தாள் தமிழ் மற்றும் பொது அறிவை சோதிக்கும் வகையில் இருக்கும்.
விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் வரும் பிப்ரவரி 11 ஆம் தேதிக்குள் டிஎன்பிஎஸ்சி வலைதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…