Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மீண்டும் பழைய முறைப்படி.. தேர்வு முறையில் மாற்றத்தை கொண்டு வரும் தேசிய தேர்வு முகமை!!

Sekar Updated:
மீண்டும் பழைய முறைப்படி.. தேர்வு முறையில் மாற்றத்தை கொண்டு வரும் தேசிய தேர்வு முகமை!!Representative Image.

இனி ஜேஇஇ தேர்வை ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே நடத்த தேசிய தேர்வு முகமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐஐடி உள்ளிட்ட மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் தொழில்நுட்ப பாடங்களை பயில ஜேஇஇ நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இது ஜேஇஇ மெயின் மற்றும் ஜேஇஇ அட்வான்ஸ்ட் என இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது.

இதில் ஜேஇஇ அட்வான்ஸ்ட் தேர்வு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடத்தப்படும் நிலையில், ஜேஇஇ மெயின் தேர்வு ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்பட்டு வந்தது. ஆனால் கொரோனா காலத்தில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த தேர்வு, ஆண்டிற்கு நான்கு முறை நடத்தப்பட்டது.

எனினும் இந்த ஆண்டு பழைய முறைப்படி இரண்டு முறை மட்டுமே நடத்தப்பட்டது. இந்நிலையில், எதிர்காலத்திலும் இதே முறையில் தேர்வை நடத்த தேசிய தேர்வு முகமை ஆலோசித்து வருகிறது. 

இதற்கிடையில் 2023 ஆம் ஆண்டிற்கான ஜேஇஇ மெயின் தேர்வு அட்டவணை இந்த வாரத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான கூடுதல் தகவல்களை மாணவர்கள் தேசிய தேர்வு முகமையின் வலைதளைத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்