Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Erode latest news : ஈரோடு இளைஞர் மீது பாய்ந்த குண்டர்சட்டம்..!

Muthu Kumar June 07, 2022 & 12:25 [IST]
Erode latest news : ஈரோடு இளைஞர் மீது பாய்ந்த குண்டர்சட்டம்..!Representative Image.

Erode latest news : ஈரோடு மாவட்டம் கோபியை சேர்ந்த ராமச்சந்திரன் மற்றும் பழனிச்சாமி ஆகிய இருவரும் கடந்த மாதம் 7-ந் தேதி கோபியில் உள்ள மது கடையில் மது அருந்திக் கொண்டிருந்தனர். இந்நிலையில் அந்த மதுபானக் கடையிக்கு வந்த சேலத்தை சேர்ந்த கவுதம் என்பவர் இருவர்களிடம் கூலிங் பீர் கேட்டு தகராறு 
செய்தார்.

இந்நிலையில், அவ்ர்கள் இருவரும் பீரை கொடுக்க இருவரும் மறுத்ததால் ஆத்திரமடைந்த கவுதம் இருவரையும் பிராந்தி பாட்டிலால் தாக்கினார். இச்சம்பவத்தில், அவர்களுக்கு காயம் ஏற்பட்டதால் கோபி காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கவுதமனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு மாவட்ட சிறையில் அடைத்தனர்.

இதனையடுத்து, கவுதம் மீது திருட்டு, கஞ்சா உள்பட பல்வேறு வழக்குகள் நிழுவையில் உள்ளதால் கவுதனை குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் மாவட்ட ஆட்ச்சியருக்கு பரிந்துரை செய்தார். அதன் அடிப்படையில், கவுதமை குண்டர் சட்டத்தில் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை கோபி மாவட்ட சிறையில் உள்ள கவுதமிடம் போலீசார் வழங்கினர். இதனை தொடர்ந்து அவர் கோயம்புத்தூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்