Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

விநாயகர் சிலை ஊர்வலம்.. சென்னையில் பல்லாயிரக்கணக்கான போலீசார் குவிப்பு!!

Sekar September 04, 2022 & 11:25 [IST]
விநாயகர் சிலை ஊர்வலம்.. சென்னையில் பல்லாயிரக்கணக்கான போலீசார் குவிப்பு!!Representative Image.

சென்னையில் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னை முழுவதும் 15 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

விநாயகர் சதுர்த்தி அன்று சென்னையின் பல பகுதிகளிலும் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் இன்று ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி சிலை கரைக்கப்படும் இடங்களான பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், பாலவாக்கம் கடற்கரைப்பகுதி, திருவொற்றியூர், காசிமேடு கடற்கரைப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

மேலும் ஊர்வலம் நடக்கக்கூடிய இடங்களில் சாலைகளிலும் போலீசார் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக பட்டினப்பாக்கம் கடற்கரையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

மேலும் சிலைகளை கரைக்க வருபவர்கள் கடலின் அலையில் மாட்டிக்கொள்ள வாய்ப்பிருப்பதால் அவர்களை மீட்க ஆழ்கடல் நீச்சல் பயிற்சி பெற்ற 50 மீனவர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்