Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

அரசு பள்ளி மாணவர்களுக்கு கொரோனா....பெற்றோர்கள் அதிர்ச்சி..!

madhankumar July 08, 2022 & 10:26 [IST]
அரசு பள்ளி மாணவர்களுக்கு கொரோனா....பெற்றோர்கள் அதிர்ச்சி..!Representative Image.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வந்த மாணவர்களுக்கு கடந்த 2 நாட்களாக சளி, மற்றும் காய்ச்ச இருந்துவந்துள்ளது. இதையடுத்து பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மொத்தமாக அந்த பள்ளியில் 170 மாணவர்கள் படித்துவந்த நிலையில் முதற்கட்டமாக 72 மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 12 மாணவர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் மேலும் 19 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதுடன், 9 மாணவர்களின் பெற்றோருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டது.

இதன் மூலம் மொத்தமாக 31 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மாணவர்களில் யாருக்கும் தீவிர பாதிப்பு இல்லாததால் அவர்கள் அனைவரும் வீட்டிலேயே தனிமை படுத்தப்பட்டுள்ளன. மேலும் அந்த கிராம மக்கள் அந்த பள்ளி வளாகம் ஆகிய பகுதிகளில் கொரோன தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சம்மந்தப்பட்ட பள்ளிக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் ஆலோசித்து வருகிறது. பள்ளி மாணவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்