Theni Latest News : தேனியில் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வரும் ஜெய்முருகேஷ் என்பவர் வீடு வாடகைக்கு, ஒத்தி, வீட்டடி மனைகள் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார்.
இந்நிலையில், தேனி சுற்றுவட்டார பகுதிகளில் வாடகைக்கு வீடு, ஒத்திக்கு வீடு, ஒரு மணிநேரத்தில் அமைத்து தரப்படும். இதற்கு சர்வீஸ் கட்டணம் கிடையாது. மேலும் பேய்வீடுகளுக்கு கட்டணம் முற்றிலும் இலவசம் என பொதுமக்களை அச்சப்படும் வகையில் போஸ்டர்களை ஒட்டியுள்ளார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து சமூகஆர்வலர்கள் தேனி காவல் நிலையத்தில் புகாரளித்தனர். இந்த புகாரின் அப்டிபடையில் ஜெய்முருகேஷிடம் விசாரணை நடத்திய போலீசார் போஸ்டர்களை அகற்ற உத்தரவிட்டனர். அதன்படி ஜெய்முருகேஷ் ஒட்டிய அணைத்து போஸ்டர்களையும் கிழித்து அகற்றினார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “தூக்குபோட்டும், விஷம் குடித்தும் தற்கொலை செய்வோர்களின் வீடுகளுக்கு யாரும் குடிவருவதில்லை. இதனால் எங்களை போன்றவர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே பொதுமக்களை கவர இதுபோன்று வித்தியாசமான முறையில் போஸ்டர் ஒட்டினேன்” என்றார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…