சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியில், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்க்காக செய்த சேட்டையால் இளைஞர்கள் இருவர் சிறையில் கம்பி என்னும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
புதுவாண்ணாரப்பேட்டை பகுதியில் துறைமுகம் குடியிருப்பு பகுதி உள்ளது. துறைமுகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் இந்த குடியிருப்பு பகுதியில் தங்கியுள்ளனர். இவர்களை குடியிருப்பு பகுதியில் இருந்து துறைமுகத்திற்கு பணிக்கு அழைத்து செல்ல வாகனம் ஒன்று பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சம்பவத்தன்று பணிக்கு அழைத்து செல்லும் வாகனம் புதுவண்ணாரப்பேட்டை துறைமுக மைதானத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது, இரண்டு இளைஞர்கள் இந்த வாகனத்தில் இருவர் ஏறி, பிளாஸ்டிக் துப்பாக்கி மற்றும் கத்திகளை வைத்து அச்சுறுத்தி, கொலை செய்வது போல் நடித்து, அதை வீடியோவாக படம் பிடித்துள்ளனர்.
பின்னர் அந்த வீடியோவை பட்டி டிங்கரிங் எல்லாம் பார்த்து, கிராபிக்ஸ் செய்து, இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளனர். இது குறித்து தகவலறிந்த போலீஸ், இன்ஸ்டாகிராம் லைக்ஸ்களுக்காக இந்த விபரீத விளையாட்டில் ஈடுபட்ட போட்டோகிராபர் சஞ்சய் (22) மற்றும் திருப்பதி சட்டக்கல்லூரியில் சட்டம் பயிலும் வினோத் (22) ஆகிய இருவரை கைது செய்தனர்.
இருவர் மீதும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், போலீஸ் வாகனத்தை சட்டவிரோதமாகப் பயன்படுத்துதல், வன்முறையைத் துாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…