சென்னையில் ஒரு வீட்டில் திருடிவிட்டு சபல புத்தியால் மாட்டிக்கொண்டு பொதுமக்களிடம் திருடன் மொத்து வாங்கியதோடு தற்போது சிறையில் கம்பி எண்ணி வருகிறார்.
சென்னை தண்டையார் பேட்டை வ.உ.சி நகரைச் சேர்ந்த மகேஷ் குமார் எனும் 29 வயது இளைஞர், அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நள்ளிரவில் பால்கனி வழியாக திருடச் சென்றுள்ளார்.
வீட்டின் உரிமையாளர்கள் அசந்து தூங்கிக் கொண்டிருந்த நிலையில், மகேஷ்குமார் பணத்தை திருடிவிட்டு அங்கிருந்து தப்பிக்க நினைத்துள்ளார். ஆனால் அதற்குள் அங்கு தனது கணவர் மற்றும் குழந்தையுடன் இளம்பெண் ஒருவர் தூங்கிக் கொண்டிருந்ததை அவர் பார்த்துள்ளார்.
அந்த இளம் பெண்ணை பார்த்ததும் சபல புத்தியில் தள்ளாடிய மகேஷ் குமார், தூங்கிக் கொண்டிருந்த இளம் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் திடுக்கிட்டு எழுந்த அந்த பெண் திருடனைப் பார்த்ததும் கத்தி கூச்சலிட்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மகேஷ்குமார் அங்கிருந்து தப்பிச்ச செல்ல முயற்சி செய்கையில், பெண்ணின் கணவரும் அக்கம்பக்கத்தினரும் ஒன்று கூடி மகேஷ்குமாரை பிடித்து அடி வெளுத்தனர். இதற்கிடையே தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்த புதுவண்ணாரப்பேட்டை போலீசார் மகேஷ்குமாரை மீட்டு கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வீட்டுக்குள் நுழைந்து பணத்தை திருடி விட்டு சபல புத்தியால் மாட்டிக் கொண்ட சம்பவம் வைரலாகி வருகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…