நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலையில் ஆடி 18 அன்று நடக்கும் வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு கொல்லிமலை பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடைகள் 3 நாட்களுக்கு மூட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
ஆகஸ்ட் 3 ஆம் தேதி ஆடி 18 அன்று வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்திற்கு ஆஸ்கர் 3 ஆம் தேதி ஒருநாள் மட்டும் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஷ்ரேயா சிங் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா நடப்பதால், கொல்லிமலை செம்மேடு, சோளக்காடு, செங்கரையில் உள்ள டாஸ்மாக் கடைகள் அனைத்தும் ஆகஸ்ட் 1 முதல் 3 ஆம் தேதி வரை மூடப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஷ்ரேயா சிங் தனது உத்தரவில் மேலும் தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…