Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கோர விபத்து.. இறந்த உறவினரின் துக்கம் விசாரிக்க சென்றபோது பரிதாபம்..

Nandhinipriya Ganeshan October 13, 2022 & 12:04 [IST]
கோர விபத்து.. இறந்த உறவினரின் துக்கம் விசாரிக்க சென்றபோது பரிதாபம்..Representative Image.

ஈரோடு: தஞ்சை பில்லிகார் வீதியை சேர்ந்தவர் அனிதா (வயது 30). ஆசிரியை படிப்பு முடித்து உள்ள இவர், ரயில்வே துறை தேர்வு எழுதி வெற்றி பெற்று, கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூர் ரயில்நிலையத்தில் ஊழியராக பணியில் சேர்ந்தார். 

இந்தநிலையில் அனிதாவின் பெரியம்மா மகன் பிரசாந்த் என்பவர் நேற்று முன்தினம் திடீரென மரணம் அடைந்தார். இதற்கு துக்கம் விசாரிப்பதற்காக அனிதா, அவருடைய தாய், தந்தையுடன் திண்டல் வந்துள்ளனர். 

துக்க நிகழ்வில் கலந்துக்கொண்ட அனிதா அவருக்கு தெரிந்த தோழி ஒருவரை பார்த்துவிட்டு வருவதற்காக உறவினர்களான ரியாஸ் (11), தனுஷ் (19) ஆகியோருடன் நேற்று ஒரு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். சுமார் 2 மணியளவில் ஈரோடு பெருந்துறை ரோட்டில் திண்டல் நோக்கி சென்றுக்கொண்டிருந்தனர். 

வீரப்பம்பாளையம் பிரிவு அருகே செல்லும்போது வழியாக வந்த லாரி இவர்களின் வாகனத்தில் மோதியதில், மூவரும் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளனர். அதில் அனிதா மட்டும் எதிர்பாராதவிதமாக லாரியின் சக்கரத்தில் சிக்கி, 50 அடி தூரத்திறு இழுத்துச்செல்லப்பட்டார். லாரி சக்கரம் அனிதாவின் ஏறியதில் உடல் நசுங்கி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

ரியாஸ் மற்றும் தனுஷ் இருவரையும் அருகில் இருந்தவர் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். இந்த கோர விபத்து தொடர்பாக வீரப்பன்சத்திரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய லாரி டிரைவரை பிடித்து விசாரணை நடந்துவருகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்