சென்னை பூந்தமல்லி அருகே ஒரு வயது குழந்தை விசிலை விழுங்கியதால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பூந்தமல்லி அருகே காட்டுப்பாக்கம் பகுதியில் பத்மாவதி நகரை சேர்ந்தவர் ஆனந்தராஜ். இவர் காய் கடை ஒன்று நடத்தி வருகிறார். இவருக்கும் இவரின் மனைவி வனஜா இருவருக்கும் தர்ஷன் என்ற மூன்று வயது மகனும், கயல்விழி என்னும் ஒரு வயது பெண் குழந்தையும் உள்ளது. இன்று காலை வீட்டில் விளையாட்டு ஜாமான்களை வைத்து விளையாட்டிக் கொண்டிருந்த அந்த பெண் குழந்தை திடீரென பேச்சு மூச்சு இல்லாமல் வீட்டில் மயங்கிய நிலையை விழுந்துள்ளது. பின்னர் பெற்றோர்கள் பதறி போய் முதுகில் தட்டி பார்க்கும் போது வாயில் இருந்து விசில் ஒன்று கீழே விழுந்தது. உடனே அந்த குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அந்த குழந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். பின்னர் விஷயம் தெரிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். அப்போது விளையாடிக்கொண்டிருந்த போது விசிலை குழந்தை விழுங்கியதால் மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்துவிட்டதாக தெரியவந்து. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…