அம்பத்தூரில் 17 வயது மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்த விவகாரத்தில் ஏற்பட்ட அதிரடியான திருப்பம். பள்ளி ஆசிரியை திடீரென்று நள்ளிரவில் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது.
கடந்த ஆகஸ்ட் மாதம் அம்பத்தூரில் 17 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நடத்திய விசாரணையில் தனக்கு படிப்பு ஒழுங்காக வரவில்லை என்ற காரணத்தால் தான் அந்த மாணவன் தற்கொலை செய்து கொண்டான் என்று வழக்கை முடித்துள்ளனர். அதில் ஏற்பட்ட திடீர் திருப்பதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இறந்த மாணவனின் போனில் அதே பள்ளியை சேர்ந்த சர்மிளா என்பவரிடம் மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை கண்டறிந்தனர். இதனால் தெரிய வந்த உண்மை, அந்த மாணவன் சர்மிளாவிடம் டியூஷன் சென்று வந்ததும், அவர்களுக்கு இடையில் காதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் சர்மிளாக்கு திருமண ஏற்பாடுகள் செய்ததால் மனமுடைந்த மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். அந்த புகைப்படங்களைக் கொண்டு அந்த மாணவனின் தாயார் புகார் அளிக்க, போலீசார் சர்மிளாவை கைது செய்து திருவள்ளூர் மகிலா நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி புழல் பெண்கள் சிறையில் அடைத்தனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…