Virudhunagar District : ராஜபாளையம் அருகே அரிசி ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
ஆந்திராவில் இருந்து கேரள மாநிலத்திற்கு அரிசி ஏற்றிய லாரியை பரமக்குடியை சேர்ந்த அஜித் குமார் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில், ராஜபாளையம் வழியாக செல்லும் போது அஜித்குமார் மது அருந்தி விட்டு லாரியை அதிக வேகத்தில் ஓட்டியுள்ளார்.
இந்நிலையில், தென்காசி சாலையில் தேவதானத்திற்கு முன்பாக உள்ள வளைவில் திரும்பும் போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தலை கீழாக கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.
இந்த விபத்தில் லாரியில் உடன் வந்த திருமூர்த்தி என்பவரும் அஜித் குமார் என்பவரும் பலத்த காயம் அடைந்துள்ளனர். இச்சம்பவத்தை, பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் லாரிக்குள் இருந்த இருவரையும் மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்
மேலும், தகவல் அறிந்து வந்த சேத்தூர் போலீசார் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…