வேலூர் தங்க கோவிலில் தரிசனம் செய்த நடிகை சமந்தா, தங்கத்தால் ஆன சொர்ணலட்சுமி அம்மன் சிலைக்கு தனது கைகளால் அபிஷேகம் செய்து தீபாதணை காட்டினார்.
தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் பிஸியாக இருக்கும் நடிகை சமந்தாவுக்கு சில வருடங்களுக்கு முன்பு தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். பின்னர், கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து விட்டனர். அதன்பிறகு, மன உளைச்சலில் இருந்த நடிகை சமந்தா, நெருங்கிய நண்பர்களுடன் மட்டுமே பேசிவந்தார். அதன்பிறகு அவர் நடித்த புஸ்பா பாடல் பட்டிதொட்டி எங்கும் பரவியது.
இந்நிலையில், வேலூரை அடுத்த ஸ்ரீபுரத்தில் அமைந்துள்ள பொற்கோவிலில் நடிகை சமந்தா சாமி தரிசனம் செய்துள்ளார். முதலில் ஸ்ரீநாராயிணி அம்மனை தரிசனம் செய்தார். அதன் பின்பு தங்கத்தால் ஆன சொர்னலட்சுமி அம்மன் சிலைக்கு தனது கைகளால் அபிஷேகம் செய்து தீபாரதணை காட்டினார். பின்னர் கோவிலை சுற்றிவந்து மனமுருகி தரிசனம் செய்தார்.
அதனைத் தொடர்ந்து பொற்கோவில் மடாதிபதி சக்தி அம்மாவை சந்தித்து அவர் ஆசி பெற்றார். அவருக்கு சக்தி அம்மா பிரசாதம் வழங்கினார். பொற்கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த நடிகை சமாந்தாவுக்கு நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…