வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த குகையநல்லூர் பகுதியைச் சேர்ந்த சரத்குமார் என்ற இளைஞரை மேல்பாடி காவல் நிலைய காவல் துணை ஆய்வாளர் கார்த்தி அவதுறாக பேசி தாக்கியதாகவும், இதன் காரணமாக சரத்குமார் தீ குளித்து உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அவரது இறப்புக்கு நீதி கேட்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க கோரியும் போராட்டம் நடைபெற்றது.
அதேபோல சரத்குமாரின் மரண வாக்குமூலத்தை மறைத்து குற்றவாளியை பாதுகாக்கும் வகையில் செயல்படும் காட்பாடி இணை காவல் கண்காணிப்பாளரின் நடவடிக்கையை கண்டித்து குகையநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னனி, இந்திய குடியரசு கட்சி ஆகிய கட்சியினர் சேர்ந்து வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் கண்டன முழக்கம் இட்டவாறு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுன்னர்.
பின்னர் ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஆகியோரிடம் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் காட்பாடி டிஎஸ்பியால் நீக்கப்பட்ட எஸ்சி எஸ்டி பிரிவை இணைக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது.
மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு நிவாரணம், அரசு பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர். 15 நாள்களுக்குள் விசாரித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் நிவாரணம் வழங்குவது தொடர்பாக அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என உறுதி அளித்ததைத் தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…