வேலூர் அருகே இரவு நேரத்தில் மாரியம்மன் கோவிலில் இருந்த உண்டியலை பெயர்த்து எடுத்து பணத்தை திருடிச்சென்ற உண்டியல் கொள்ளையர்களை சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளை கொண்டு காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் சித்தேரி பகுதியில் மகாசக்தி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. ஆள்நடமாட்டம் குறைந்த பிறகு இரவு நேரத்தில் இந்த கோவிலிக்குள் மர்ம நபர்கள் புகுந்துள்ளனர். பின்னர் போலீசாரிடம் மாட்டிக்கொள்ளாமல் இருக்க இரண்டு பேரும் முகத்தை துணியால் மூடிக்கொண்டு கோவிலில் இருந்த உண்டியலை பெயர்த்து எடுத்து தூக்கிச்சென்றனர்.
காட்டுப்பகுதிக்கு எடுத்துச் சென்று, உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டு, ரயில்வே தண்டவாளம் அருகே உண்டியலை வீசிவிட்டு சென்றனர். காலையில் கோவிலுக்கு வந்த பக்தர்கள், உண்டியல் காணாமல் போயிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அரியூர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ள காட்சிகளை வைத்து உண்டியல் திருடர்களை தேடி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…