Erode flash news : ஈரோடு மாவட்டத்தில் முயல் வேட்டையில் ஈடுபட்ட வாலிபரை கைது செய்து அவருக்கு 20 ஆயிரம் ருபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனக்கோட்டம் விளாமுண்டி கணக்கரசம் பாளையம் பகுதியில் வனவர் ஆறுமுகம் தலைமையில் வனக்காப்பாளர்கள் ஹரிவிக்னேஷ், துரைசாமி, மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் வனப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில், நேற்று வேட்டை தடுப்பு காவலர்கள் சோதையில் ஈடுபட்டபோது சத்தியமங்கலம் அடுத்த கணக்கரசம் பாளையத்தை சேர்ந்த காளிமுத்து என்பவர் சந்தேகம் அளிக்கும் வகையில் ஒரு கைப்பையுடன் சென்றுள்ளார்.
இதனையடுத்து, காளிமுத்துவை வழிமறித்த வனத்துறையினர் அவர் வைத்திருந்த கைப்பையை சோதனை செய்ததில் அப்பையில் ஒரு இறந்த முயல் மற்றும் சுருக்கு கம்பி இருப்பது தெரியவந்தது. இதைடுயடுத்து வனத்துறையினர் காளிமுத்துவிடம் நடத்திய விசாரணையில் அவர் முயலை வலை கம்பி வைத்து வேட்டையாடியது தெரியவந்தது.
இந்நிலையில் காளிமுத்துவை கைது செய்த வனத்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து 20 ஆயிரம் ருபாய் அபராதம் விதித்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…