நெல்லையில் அமமுக நிர்வாகி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் தெற்கு காரசேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. அமமுக நிர்வாகியான இவர் பாளையங்கோட்டையில் கார் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். மேலும் பழைய கார்களை உடைத்து அதன் உதிரி பாகங்களையும் விறொபனை செய்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று (27ம் தேதி) இரவு வழக்கம் போல கடையை மூடி விட்டு வீட்டிற்குச் சென்றுள்ளார். திடீரென வீட்டிற்குள் வந்த மர்மகும்பல் அவரைச் கண் இமைக்கும் நேரத்தில் சரமாரியாக வெட்டி விட்டுத் தப்பினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த காவல்துறையினர், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய்கள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து மேலப்பாளையம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…