மஞ்சள் மற்றும் குங்குமத்தை மட்டும் பயன்படுத்தி 108 விநாயகர் ஓவியங்கள் வரைந்து கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ள மாணவி ஸ்ரீநிதிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
அரசு அருங்காட்சியகத்தில் அவ்வப்போது பள்ளி மாணவ மாணவிகளுக்கு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் மஞ்சள்,குங்குமம் கொண்டு விநாயகர் ஓவியம் வரையும் போட்டி மற்றும் கண்காட்சி நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் தங்களது ஓவியத் திறமையை வெளிப்படுத்தி வரைந்த ஓவியங்களை காட்சிப் படுத்துயிருந்தார்கள்.
இந்த போட்டியில் கலந்து கொண்ட மாணவி ஸ்ரீநிதி என்பவர், கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியாக மஞ்சள் மற்றும் குங்குமம் மூலம் 108 விநாயகர் ஓவியங்களை வரைந்து அசத்தியுள்ளார்.
கண்காட்சியை பி[பார்வையிடும் பொதுமக்கள் அனைவரும் மாணவி ஸ்ரீமதியின் முயற்சிக்கு பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…