Namakkal News Live : நாமக்கலில் உள்ள புகழ்பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் தரிசன கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
நாமக்கலில் உள்ள புகழ்பெற்ற நரசிம்மர் கோவிலுக்கு எதிரே அமைந்துள்ள மேற்கூரை அற்ற ஆஞ்சநேயர் கோவிலில் உள்ள ஆஞ்சநேயரை தரிசிக்க தமிழ்நாடு முழுவதும் பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் 18 அடி உயரமுள்ள ஒரே கல்லினால் செய்யப்பட்ட ஆஞ்சநேயர் சிலை இங்குதான் அமைந்துள்ளது. மேலும், இந்த ஆஞ்சநேயரை தரிசிப்பதற்கு நபர் ஒருவருக்கு 20 ருபாய் தரிசன கட்டணமாக வசூலிக்கப்பட்டது.
இந்நிலையில், குடும்பத்தோடு வரும் நபர்கள் தரிசனத்திற்காக பெரும் தொகையை கட்டணமாக செலுத்த வேண்டிய நிலை உள்ளது. இதனால் தரிசன கட்டண முறையை நீக்கும்படி பக்தர்கள் பலர் கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து, இனி நாமக்கலில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் தரிசன கட்டணம் முறை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பக்தர்கள் இலவசமாக தரிசனம் செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பக்தர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…