Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

ஈரோட்டில் கவன ஈர்ப்பு போராட்டம்... 70 டாக்டர்கள் பங்கேற்ப்பு...

Muthu Kumar August 08, 2022 & 19:20 [IST]
ஈரோட்டில் கவன ஈர்ப்பு போராட்டம்... 70 டாக்டர்கள் பங்கேற்ப்பு...Representative Image.

தமிழகத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தினமும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை டாக்டர்கள் பணி புரிந்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசு தற்போது புதிய அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி டாக்டர்களின் வேலை நேரம் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நீட்டிக்கப்பட்டுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு மணி நேரம் வேலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த அறிவிப்புக்கு தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதன்ப்-அடி, அரசாணையை திரும்ப பெற வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதனையடுத்து, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் இன்று மதியம் டாக்டர்கள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், ஈரோட்டில் நடைபெற்ற போராட்டத்தில் தமிழ்நாடு அரசு டாக்டர் சங்கத்தின் மாவட்ட தலைவர் டாக்டர் சீனிவாசன் தலைமையில் செயலாளர் கோகுலகிருஷ்ணன், கவுரவ தலைவர் டாக்டர் ரவிச்சந்திரன் பிரபு உள்பட 70-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் கலந்து கொண்டனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்