ஈரோட்டில் இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி நேற்று மதியம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாபெரும் பேரணி நடைபெற்றுள்ளது. இந்த பேரணி உட்பட பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை நேற்று ஈரோடு வந்துள்ளார்.
இந்நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இந்த பேரணியில் தேசிய கொடியை கையில் ஏந்தியபடி நிர்வாகிகளுடன் ஊர்வலமாக சென்றார். அதன்படி, இந்த ஊர்வலம் ஈரோடு டீச்சர்ஸ் காலனியில் தொடங்கி பெருந்துறை சக்தி துரைசாமி திருமண மண்டபத்தில் முடிவடைந்தது.
இதனையடுத்து, பாரதிய ஜனதா கட்சியின் நெசவாளர் பிரிவு சார்பில் தேசிய கைத்தறி தினவிழாவை ஒட்டி சிறந்த நெசவாளர்களை கவுரவித்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடை பெற்றுள்ளது.
மேலும், இந்த விழாவில் கலந்து கொள்ளும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நெசவாளர்களை கவுரவித்து நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…