Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஆட்டோ-வேன் நேருக்கு நேர் மோதல்.. மாணவர்கள் பலர் காயம்.. ஓடோடி வந்த அமைச்சர்!!

Sekar August 29, 2022 & 17:52 [IST]
ஆட்டோ-வேன் நேருக்கு நேர் மோதல்.. மாணவர்கள் பலர் காயம்.. ஓடோடி வந்த அமைச்சர்!!Representative Image.

விருதுநகர் மாவட்டத்தில் ஆட்டோ மற்றும் வேன் நேருக்கு நேர் மோதியதில் 10 மாணவ மாணவியர் மற்றும் ஆட்டோ டிரைவர் காயமடைந்தனர்.

விருதுநகர் அருகே உள்ள துலுக்கன்பட்டி எனும் பகுதியைச் சேர்ந்த 2 மாணவிகள் உட்பட  10 மாணவர்கள் காலை டிரைவர் நாகராஜின் ஆட்டோவில் ஆவுடையாபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்றனர்.

பள்ளிக்கு சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ஆவுடையாபுரம் ரெயில்வே கேட் பகுதியில், எதிரே வந்த பட்டாசு ஆலை வேன் மீது எதிர்பாராத விதமாக ருக்கு நேர் மோதியதில் ஆட்டோவின் முன்பகுதி சேதமடைந்தது.  

மேலும் ஆட்டோவில் சென்ற மாணவ-மாணவியர், டிரைவர் நாகராஜன் என 11 பேர் காயமடைந்தனர். அங்கிருந்த பொதுமக்கள் காயமடைந்த அனைவரையும் மீட்டு விருதுநகர் அரசு ஹாஸ்பிட்டலில் சேர்த்தனர். அங்கு அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. 

இதற்கிடையே விபத்து குறித்து தகவல் அறிந்த அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி, எஸ்பி மனோகர் ஆகியோர் மருத்துவமனைக்கே நேரடியாக சென்று காயமடைந்த மாணவ-மாணவிகளை சந்தித்து ஆறுதல் கூறினர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்