விருதுநகர் மாவட்டத்தில் பெண் ஒருவரை கடத்தி சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த விவகாராத்தில் 18 வயது நிரம்பாத சிறுவன் ஒருவன் உட்பட ஐந்து பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த ஒரு பெண், தனது உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்று விட்டு சொந்த ஊர் திரும்புவதற்காக பஸ் ஸ்டாப்பில் நின்றுள்ளார். அப்போது அந்த பகுதி வழியாக காரில் வந்த பெண்ணுக்கு தெரிந்த ஒருவர், சம்பந்தப்பட்ட பெண்ணை ஊரில் விட்டுவிடுவதாக கூறி காரில் ஏற்றிச் சென்றுள்ளார்.
போகும் வழியில் காரை நிறுத்தி விட்டு, காருக்கு வெளியே நின்றுகொண்டு அந்த பெண்ணுடன் ஏதோ பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது பைக் மற்றும் காரில் வந்த 7 பேர் கொண்ட கும்பல், திடீரென அந்த நபரை தாக்கிவிட்டு பெண்ணை கடத்திச் சென்றுள்ளனர்.
பெண்ணை கடத்திச் சென்ற கும்பல், அவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. அதன் பின்னர் மீண்டும் கடத்திய இடத்திலேயே கொண்டுவந்து விட்டு சென்றுள்ளனர்.
இதையடுத்து அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அந்த பெண் டாக்டர்களிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். அவருக்கு உடனடியாக சிகிச்சை அளித்த மருத்துவர்கள் போலீசிடம் இது குறித்து தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து உடனடியாக களத்தில் இறங்கிய போலீசார், சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளிகள் 5 பேரை கைது செய்துள்ளனர். அதில் ஒருவன் 18 வயது நிரம்பாத சிறுவன் ஆவான். மேலும் தலைமறைவாக உள்ள இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…