சென்னை உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் இளைஞர்கள் பைக் சாகசம் புரிவதன் பேரில், வீடியோக்களை எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிடுகின்றனர். இது போன்ற சர்ச்சைகளை, நாம் சில நாள்களாகவே கேட்டுக் கொண்டு வருகிறோம். இளைஞர்கள் செய்யும் இது போன்ற செயல்களால், மற்றவர்களையும் இதன் பக்கம் இழுத்து விடுமோ என்ற அபாயமும் எழுகிறது.
சென்னையில் உள்ள தேனாம்பேட்டை பகுதியில் அண்ணா சாலை, கடற்கரை சாலை போன்ற இடங்களில், குறிப்பாக நள்ளிரவில் இளைஞர்கள் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இது போன்ற நடவடிக்கைகளைத் தடுக்க காவல் துறையினர் பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருந்த போதிலும், இந்தச் செயல்கள் குறைந்தது போல தெரியவில்லை.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் காவல்துறை எச்சரிக்கையை மீறி அண்ணா சாலையில் இளைஞர்கள் சிலர் இரு சக்கர வாகனத்தில் சாகசம் செய்ததுடன், வீடியோவாக இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். இதில், ஒருவன் பைக்கின் முன் சக்கரத்தைத் தூக்கியவாறு ஒரே சக்கரத்தில் பைக்கை ஓட்டி ஸ்டண்ட் செய்ததாகக் கூறப்படுகிறது.
இவ்வாறு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் விதமாகவும், இது தவறான வழிகாட்டிகளைப் பரவுவதாகவும் அமைவதால், போக்குவரத்து புலனாய்வுத் துறை போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…