Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கண்டித்த ஆசிரியர்.. விரக்தியில் மாணவி.. இறுதியில் நடந்த விபரீதம்!!

Sekar September 23, 2022 & 12:56 [IST]
கண்டித்த ஆசிரியர்.. விரக்தியில் மாணவி.. இறுதியில் நடந்த விபரீதம்!!Representative Image.

சென்னை அருகே 11 ஆம் வகுப்பு பள்ளி மாணவி ஒருவர் ஆசிரியர் கண்டித்ததால் மனமுடைந்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அடுத்த பல்லாவரம் பொழிச்சலூர் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி, அருகில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்தார். சமீப காலமாக இவர் பாடங்களை ஒழுங்காக படிக்காமல் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

மாணவியின் படிப்பு மோசமடைந்து வந்ததால் அவரது ஆசிரியர் பள்ளியில் இது குறித்து விசாரித்து ஒழுங்காக படிக்குமாறு கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த மாணவி கடந்த சில நாட்களாகவே கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், இன்று வீட்டில் அனைவரும் அவரவர் வேலைக்கு செல்லும் வரை பள்ளிக்கு தயாராவது போல் ரெடியாகி கொண்டிருந்த மாணவி, வீட்டில் அனைவரும் வேலைக்கு கிளம்பியவுடன் தனது துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி தற்கொலை செய்து கொண்டார்.

இதற்கிடையே வெளியில் சென்றிருந்த பெற்றோர் வீட்டிற்கு வந்து பார்த்த போது மாணவி, துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி இறந்த நிலையில் இருப்பது தெரியவந்தது.

இந்நிலையில் சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார், மாணவியின்  உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து பல்வேறு கோணங்களிலும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்