திருப்பூர்: பல்லடம் செட்டிபாளையம் சாலையில் கொரியர் வேனும் காரும் மோதிக்கொண்ட விபத்தில் வேன் தலைகீழாக கவிழும் சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் செட்டிபாளையம் சாலையில் சிடிசி காலனியில் இருந்து கொரியர் ஏற்றிக்கொண்டு வந்த வேன் பல்லடத்தை நோக்கி சென்று கொண்டிருந்தபோது செட்டிபாளையத்திலிருந்து நாமக்கல் நோக்கி சென்ற கார் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் வடுகபாளையம் பகுதியை சேர்ந்த ஓட்டுநர் கோகுல் மற்றும் கொரியர் டெலிவரி ஊழியர் ரமேஷ் இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தபியுள்ளனர். இதைதொடர்ந்து காரில் பயணித்த நாமக்கல் பகுதியை சேர்ந்த சுஜித் மற்றும் அவரது தாய் பரமேஸ்வரி ஆகியோர் படுகாயங்களுடன் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில், இந்த விபத்து தொடர்பான சிசிடிவி தற்போது வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்லடம் போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…