ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள எல்ஈஎப் இம்மானுவேல் மழலையர் மற்றும் சிறுவர் பள்ளி வளாகத்தில் கிறிஸ்துவ புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பவானி சிஎஸ்ஐ கிறிஸ்து நாதர் தேவாலயத்தின் ஆயர் விக்டர் ராஜ் தலைமையில் இந்த கண்காட்சி தொடங்கியது. அகில இந்திய தேவசபை தலைமைப் போதகர் ஜார்ஜ் பால் ரிப்பன் வெட்டி கண்காட்சியைத் திறந்து வைத்தார்.
இதனையடுத்து, இக்கண்காட்சி ஆகஸ்ட் 20-ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த புத்தக கண்காட்ச்சியில், ஆங்கிலம், தமிழ் வேதாகமம், விளக்க உரைகள், ஆன்மீக வளர்ச்சி, சாட்சிக்குரிய புத்தகங்கள், லேமினேஷன் போர்டுகள், பைபிள் கவர்கள், காணிக்கை பைகள், குழந்தைகளுக்கான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…