ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கஞ்சா விற்பணை நடப்பதை தடுக்கும் விதமாக பல இடங்களில் காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சந்தேகத்திற்க்கு இடமான ஒரு காரில் சோதனை நடத்தினர். அப்போது, அந்த காரில் 1.1 கிலோ கஞ்சா, 8 பாட்டில் கஞ்சா திரவம், ஊசி போன்றவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதனையடுத்து, கார் ஓட்டுனரிடம் நடத்திய விசாரணையில், வழக்கமான இடங்களில் கஞ்சா விற்பனை செய்வதற்கு நெருக்கடிகள் அதிகரித்ததால், சொகுசு காரில் வைத்து கஞ்சா விற்பனை செய்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும், ஈரோட்டில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்த கார் ஓட்டுநர் முகமது ஆசிக் என்பவரை கைது செய்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…